அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

29 அக்., 2011

லால்பேட்டை பேருராட்சி மன்ற துணை தலைவர் பதவியை மனித நேய மக்கள் கட்சி கைப்பற்றியது


இறைவனின் உதவியுடன் லால்பேட்டை பேருராட்சி மன்ற 

துணை தலைவர் பதவிக்கு
மனித நேய மக்கள் கட்சி (10 வார்டு) உறுப்பினர்
அஹ்மத் அலி அவர்கள்
போட்டி இன்றி தேர்வு செய்யபட்டார்.

அல்ஹம்துலில்லாஹ்

27 அக்., 2011

வாக்காளராக சேர இன்னொரு வாய்ப்பு


வாக்காளராக சேர இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத் தாண்டு  ஜனவரி 1ம் தேதி 18 வயது நிரம்புகின்ற வாக்காளர் களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் துவங்கு கிறது. இதனையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.

வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையர், தாசில் தார் அலுவலகங்கள், அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களி லும் வரைவு பட்டியல் பார்வைக்கு வைக்கப்படும்.

பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மனுக்களை வரும் நவம்பர் 8ம் தேதி வரை அளிக்கலாம். மேலும் மனுக்களை பெற வரும் அக்டோபர் 30ம் தேதி, நவம்பர் 6ம் தேதி ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

மேலும் வரும் 29ம் தேதி மற்றும் நவம்பர் 1ம் தேதி ஆகிய நாட்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியலில் தொடர்புடைய பாகம், பிரிவு ஆகியன படிக்கப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும். வெளிநாட்டில் வசிக்கின்ற இந்திய குடிமக்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்க சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6ஏ நேரில் அளிக்கப்பட வேண்டும். அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிக்கு தபாலிலும் படிவத்தை அனுப்பலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரு வாய்ப்பு

சென்னையில்: சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி ஆணைய ருமான தா.கார்த்திகேயன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த பொதுத் தேர்தலின்போது சென்னை மொத்த வாக்காளர்கள் 31,71,856 பேர். இவர்களில் ஆண்கள் 15,90,289 பேர். பெண்கள் 15,80,923 பேர். இதர இனம் 374 பேர். கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி முதல் 9,117 ஆண்கள், 8,960 பெண்கள், இதர இனத்தினர் 7 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். பட்டியலில் இருந்து 170 ஆண்களும், 152 பெண்களும் நீக்கப்பட்டனர். இறுதியாக 15,99,236 ஆண்கள், 15,89,731 பெண்கள், 381 இதர இனம் என மொத்தம் 31,89,348 பேர் இடம் பெற்றுள்ளனர்.

பட்டியலில் சேர்க்க, திருத்த, நீக்க  8ம் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் 30ம் தேதி, நவம்பர் 6ம் தேதி ஞாயிற்று கிழமையும் நடைபெறும். இந்த நடவடிக்கைகள் முடிந்த பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

என்ன படிவம் தேவை?

வாக்காளர் பட்டியலில் முதன் முறையாக பெயர் சேர்க்க படிவம்  எண்  6, வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் பெயர் சேர்க்க படிவம் 6 ஏ, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு உள்ளேயே மாறியிருந்தால் படிவம் 8 ஏ, பெயரை நீக்க படிவம் 7, பெயர், வயது, பாலினம், உறவு முறை முதலிய பதிவுகளில் திருத்தம் அல்லது சரியான உருவப்படம் இடம் பெறச் செய்ய படிவம் 8ல் விண்ணப்பிக்க வேண்டும்.

படிவங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் மீது வாக்காளர் பதிவு அதிகாரி ஆணை பிறப்பிக்கும் முன்னர் வாக்குசாவடி நிலை அலுவலர் மூலம் வீடு வீடாகச் சென்று விண்ணப்பம் மீது விசாரணை நடத்தப்படும். அதன் பின்னரே பெயர் பட்டியலில் சேர்க்கப்படும்.
 

20 அக்., 2011

சொத்து குவிப்பு வழக்கு: ஜெ. நாளை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்

பெங்களூரு/சென்னை , வியாழன், 20 அக்டோபர் 2011
சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நாளை மீண்டும் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகிறார். 

நீண்ட இழுத்தடிப்புக்கு பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக ஜெயலலிதா,பெங்களூர் பரப்பன அக்ரஹார தனி நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயலலிதவிடம் கேட்பதற்காக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா சுமார் 300 கேள்விகள் அடங்கிய பட்டியலை தயார் செய்து வைத்திருந்தார்.

காலை 11 மணி அளவில் விசாரணை தொடங்கியதும் அவரிடம் கேள்விகளை கேட்க தொடங்கிய ஆச்சார்யா,மதியம் 2 மணி வரை கேள்விகளை கேட்டார்.

இந்நிலையில் மதிய உணவு இடைவேளைக்காக நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டவுடன், ஜெயலலிதா தனது காரில் அமர்ந்தபடியே மதிய உணவை சாப்பிட்டார். அவருக்காக பெங்களூரில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றிலிருந்து உணவு வரவழைக்கப்பட்டது. 

இந்நிலையில்,மதிய உணவு இடைவேளை முடிந்து விசாரணை தொடங்கியதும் அவரிடம் ஜெயலலிதா மீண்டும் கேள்விகளுக்கு பதில் அளிக்க தொடங்கினார். 

மாலை 5.15 மணி வரை கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் எவ்விதத் தயக்கமோ,சோர்வோ இல்லாமல் அவர் பதிலளித்ததாக ஜெயலலிதா தரப்பு மூத்த வழக்கறிஞர் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப் படி, அவரிடம் நாளையும் இதேபோன்று கேள்விகள் கேட்கப்படவுள்ளது. நாளை காலை 11 மணிக்கு மேல் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி கூறியிருந்தார். எனவே, நாளை காலை மீண்டும் ஜெயலலிதா பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று வழக்கறிஞர்கள் கூறினர். 

அதற்கு அவர் அளிக்கும் பதில்கள் முடிந்தபிறகு, ஜெயலலிதா தரப்பு அளிக்கவுள்ள கேள்விகள் விசாரணை நிறைவுபெறும். அதன்பின்னர், சசிகலா, இளவரசி உள்ளிட்டோரிடம் தொடங்கும் என்று தெரிகிறது. 

நீதிமன்றத்தில் இன்று நடந்த இந்த விசாரணையை அடுத்து அவர் நீதிமன்றத்தில் இருந்து மாலை 5.17 மணிக்கு வெளியேறினார்.பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சென்னை புறப்பட்டார்.

18 ஜூலை, 2011

திருப்பூர் சாயத் தொழில் பிரச்னையில் ஜெயலலிதா தலையிட்டு தீர்வு காண கோரி மனித சங்கிலி போராட்டம்

திருப்பூர்: திருப்பூர் சாயத் தொழில் பிரச்னையில், தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு தீர்வு காண கோரி ஜூலை 22 ம் தேதி, மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

திருப்பூர் சாய தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து, அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம், மார்க்சிய கம்யூஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் காமராஜ் தலைமை வகித்தார். திருப்பூரில், சாய சலவை ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள சமூகப் பொருளாதார பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 

அப்போது , சாய கழிவுநீர் பிரச்னையில், தமிழக முதல்வர் நேரடியாக தலையிட வேண்டும் என்றும், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, பொருளாதார பாதிப்புகளில் இருந்து திருப்பூரை மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

மேலும், சாய ஆலைகளை திறந்து இயக்க, தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூலை 22 ம் தேதி திருப்பூர் குமரன் சிலை அருகே மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 

"ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழிற்நுட்பத்தை நடத்த முன்வரும் சாய ஆலைகளை இயங்க அனுமதிக்க வேண்டும் , விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையை விரைவில் வழங்க வேண்டும் , கண்காணிப்பு குழுவை விரிவாக்கம் செய்ய வேண்டும் , ஏற்கனவே அறிவித்தபடி,ரூ 320 கோடி ரூபாய் மானிய உதவியை வழங்க வேண்டும், சாய ஆலைகளுடன் சலவை ஆலைகளை சேர்க்காமல், சலவை ஆலைகளை உடனடியாக இயங்க அனுமதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில், சட்ட மன்ற உறுப்பினர் தங்கவேல், இ.கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ரவி, தே.மு.தி.க., ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக் கட்சி போன்ற பல்வேறு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

8 ஜூலை, 2011

சமச்சீர் கல்வியில் உருது, அரபு மொழி பாதுகாக்கப்பட வேண்டும் : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்(தினமலர்)


"உருது, அரபு மொழியை பாதுகாக்கும் வகையில், சமச்சீர் கல்வி அமைய வேண்டும்'' என, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர், ஜவாஹிருல்லா பேசினார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க் களுக்கு பாராட்டு விழா சென்னை, எழும்பூரில் நேற்று நடந்தது. இதில், இந்திய கம்யூ., கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் பேசும்போது,"மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரை வைத்ததற்கு, என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலோடு பணிகள் நிற்கவில்லை. இனிதான் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் அதிகம் உள்ளது. ஆட்சி மாற்றத்தால் மிகப்பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. அமைச்சரவையில் மட்டும் தான் மாற்றம் ஏற்பட்டுள்ளது' என்றார்.


மார்க். கம்யூ., கட்சியின் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் பேசுகையில், "சிறுபாண்மை சமுதாய பிரச்னைகளுக்கு, எங்கள் கட்சி தொடர்ந்து போராடும். சட்டசபையில் மனித நேய மக்கள் கட்சிக்கு உறுதுணையாக இருப்போம்' என்றார். அ.தி.மு.க., சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலர் அன்வர் ராஜா பேசும்போது, "அமைச்சர்கள் முறையாக செயல்படவில்லை என்ற காரணத்தினால் தான், அமைச்சரவையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுகிறது. அமைச்சரவை மாற்றம் மூலம், பணிகள் வேகமாக நடக்கிறது. கடந்த ஆட்சிக் காலத்தை போல்,
அதிகாரிகளை எங்கள் கட்சிக்காரர்கள் மிரட்டுவது இல்லை' என்றார்.


இந்நிகழ்ச்சியில், ஜவாஹிருல்லா பேசியதாவது: கடந்த 16 ஆண்டுகளாக, த.மு.மு.க., வில் பணியாற்றிய தொண்டர்களால், தற்போது அங்கீகாரம் கிடைத்துள்ளது. சட்டசபை தேர்தலில், தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற, எங்கள் உணர்வை, அ.தி.மு.க., தலைமை ஏற்றது. சட்டசபையில், தமிழக மக்களுக்காக, தொடர்ந்து எங்கள் கட்சி, குரல் கொடுக்கும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, இஸ்லாமிய சமுதாயத்தினர் அதிகம் பேர், மருத்துவ படிப்பில் சேருவதற்கு, இடம் வழங்கப்பட்டுள்ளது.உருது, அரபு மொழியை பாதுகாக்கும் வகையில், சமச்சீர் கல்வி அமைய வேண்டும். இதற்காக, பள்ளி கல்வித் துறை அமைச்சரை சந்திந்து மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு ஜவாஹிருல்லா பேசினார்.


இந்நிகழ்ச்சியில், இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் தாவூத் மியான்கான், மனித நேய மக்கள் கட்சியின், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷா, பொதுச் செயலர் ஹைதர் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
free counters